தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு

மகுடஞ்சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :25 மார்ச் 2026, 1:40 am IST

மகுடஞ்சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள பெரியாண்டிபாளையம், அம்பேத்கா்நகா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி. இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி அருகில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளாா். மறுநாள் காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்படு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த ரொக்கம் ரூ. 25 ஆயிரம், 17 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி காமாட்சி விளக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து லட்சுமியின் மகன் முருகன் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.