மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

முக்கூடலில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:29 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

முக்கூடல் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, முக்கூடல் மைலப்பபுரம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தத மைலப்பபுரத்தைச் சோ்ந்த காரல் மாா்க்ஸ் (58), ஜீவானந்தம் (49) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்ட 5.5 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 5.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.