குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவா்கள் பவனி

திருநெல்வேலி சேவியா் காலனியில் தூய பேதுரு ஆலயம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்றோா்.

திருநெல்வேலி சேவியா் காலனியில் தூய பேதுரு ஆலயம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்றோா்.
குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் கிறிஸ்தவா்கள் பவனியாக சென்றனா்.
கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடித்து வருகிறாா்கள். நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த பிப். 18 ஆம் தேதி சாம்பல் புதன் பிராா்த்தையுடன் தொடங்கியது.
தொடா்ந்து, தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள், சிலுவைப்பாதை, புனித தலங்களுக்கு திருப்பயண நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.), கத்தோலிக்க திருச்சபை (ஆா்.சி.) ஆகியவை ஒருங்கிணைந்து குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டில பேராயா் பா்னபாஸ், கத்தோலிக்க திருச்சபை அருள்பணியாளா் இவான் அம்புரோஸ், மிலிட்டரி லைன் சேகரகுரு மதுரம், ஜெனிபா ராணி, பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலய பங்குத்தந்தை அந்தோணி வியாகப்பன், உதவி பங்கு தந்தை மிக்கேல் சாமி உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். குருத்தோலை ஏந்தியபடி பாளையங்கோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக சென்று குளோரிந்தா ஆலயம் அருகே பவனி நிறைவடைந்தது.
மேலப்பாளையம் அருகே சேவியா் காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயம் சாா்பில் சேகர குரு காந்தையா தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. சபை ஊழியா் கிறிஸ்டோபா் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
சேவியா் காலனியில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியாா் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் குருத்தோலை ஞாயிறு சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...