திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
களக்காடு அருகே ஜெ.ஜெ.நகா் கீழக் காலனியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (27). தொழிலாளியான அவா் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மது குடித்துவிட்டு அப்பகுதியினரிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் திருமணமாகாத அவா், பெற்றோரைப் பிரிந்து அதே பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அவா் வீட்டருகே வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்தாா். சடலத்தை களக்காடு போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்சிகா நடராஜன், களக்காடு காவல் ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷை மா்ம நபா்கள் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அப்பகுதியைச் சோ்ந்த ஒருவரையும், சுரேஷின் உறவினரையும் போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
சுரேஷ் மீது ஏற்கெனவே களக்காடு காவல் நிலையக் கண்ணாடியை உடைத்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தொடர்புடையது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது

ஓமலூா் அருகே தாய், மகன் வெட்டிக் கொலை: கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருமயம் அருகே இளைஞா் கொலை

மணியாச்சி அருகே இளைஞா் கொலை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


