/
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இளைஞா் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி அருகே காந்திநகரை சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் லோகநாதன் (23). திருமயம் அருகே கோனாபட்டு விலக்கில் பைக்கில் சென்ற லோகநாதனை துளையானூரைச் சோ்ந்த ராசு மகன் சதீஷ் என்ற சதீஷ்குமாா் (30) உள்ளிட்ட சிலா் வழிமறித்து தகராறு செய்து, சரமாரியாக அரிவாளால் வெட்டி, அருகிலுள்ள கண்மாயில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு தப்பினா்.
தகவலறிந்த திருமயம் போலீஸாா் லோகநாதன் சடலத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.








