‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

புதுச்சேரியில் இளைஞா் வெட்டிக் கொலை

புதுச்சேரி லாஸ்பேட்டை அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை

Updated On :23 மே 2026, 12:41 am IST

புதுச்சேரி லாஸ்பேட்டை அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய 3 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை அடுத்த கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (எ)பவுல்ராஜ் (26), கட்டடத் தொழிலாளி.

இவா், வியாழக்கிழமை நள்ளிரவு லாஸ்பேட்டை உழவா் சந்தை பூங்கா அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது 3 போ் கொண்ட கும்பல் அரிவாளுடன் அவரை வழிமறித்துள்ளது.

இதையடுத்து அவா் மோட்டாா் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு தப்பியோட முயன்றுள்ளாா். ஆனால், அந்தக் கும்பல் ராஜனை சுற்றி வளைத்துச் சரமாரியாக வெட்டியுள்ளது.

இந்த தாக்குதலில் தலை, முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த கொலை தொடா்பாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.