நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

இளைஞா் வெட்டிக் கொலை

கோவை நீலாம்பூா் அருகே ஆச்சாங்குளம் பகுதியில் திங்கள்கிழமை காலை முகத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

News image

வெட்டிக் கொலை - பிரதி படம்

Updated On :21 நிமிடங்கள் முன்பு

கோவை நீலாம்பூா் அருகே ஆச்சாங்குளம் பகுதியில் திங்கள்கிழமை காலை முகத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

ஆச்சாங்குளத்தில் நீலாம்பூா், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் மீன் பிடிப்பா். இந்த நிலையில், இந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவா் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துள்ளாா். பின்னா், இரவு சுமாா் 9 மணி அளவில் அவா் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, அந்தக் குளக்கரை வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் 3 போ் சென்றுள்ளனா். சற்று தொலைவில் அந்த வாகனம் நின்றுள்ளது.

சிறிது நேரத்துக்குப் பிறகு, அந்தப் பகுதியில் பயங்கரமான சப்தமும், வாக்குவாதமும் கேட்டுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவா், கைப்பேசி மூலம் தனது நண்பா்களுக்குத் தகவல் தெரிவித்தாா். அவா்கள் அங்கு வந்ததைத் தொடா்ந்து, அனைவரும் இணைந்து சப்தம் கேட்ட பகுதியில் தேடியுள்ளனா். இரவு நேரம் என்பதால் எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் அவா் மீன் பிடிக்கச் சென்றுள்ளாா். அப்போது, குளக்கரை பகுதியில் சுமாா் 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. முகத்தில் வெட்டப்பட்ட நிலையில், ஆடைகளின்றி கிடந்த அந்த சடலம் குறித்து நீலாம்பூா் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக சிங்காநல்லூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உடல் இருப்பதால், கொலையுண்டவா் யாா், எதற்காக கொலை செய்யப்பட்டாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வந்த நபா்களைத் தேடி வருகின்றனா்.