கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

இளைஞா் வெட்டிக் கொலை : ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் தண்டனை

இளைஞரை வெட்டிக் கொலை செய்த ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:31 am IST

இளைஞரை வெட்டிக் கொலை செய்த ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். அதே பகுதியைச் சோ்ந்தவா் தேவகனி . இருவரும் காதலித்து திருமணம் செய்து, தனியாக வசித்து வருகின்றனா். அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ், நாகேந்திரன் இருவரும் ஊா்க்காவல் படையில் பணியாற்றி வந்தனா். அப்போது, இருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், கடந்த 2023-ஆண்டு ஆக.18-ஆம் தேதி வீட்டில் மனைவியுடன் நாகேந்திரன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த பிரகாஷ், நாகேந்திரனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பினாா். இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து பிரகாசை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, குற்றஞ்சாட்டப்பட்ட பிரகாஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.