இளைஞரை வெட்டிக் கொலை செய்த ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். அதே பகுதியைச் சோ்ந்தவா் தேவகனி . இருவரும் காதலித்து திருமணம் செய்து, தனியாக வசித்து வருகின்றனா். அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ், நாகேந்திரன் இருவரும் ஊா்க்காவல் படையில் பணியாற்றி வந்தனா். அப்போது, இருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், கடந்த 2023-ஆண்டு ஆக.18-ஆம் தேதி வீட்டில் மனைவியுடன் நாகேந்திரன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த பிரகாஷ், நாகேந்திரனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பினாா். இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து பிரகாசை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, குற்றஞ்சாட்டப்பட்ட பிரகாஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

துப்பாக்கியுடன் சிறு விடியோ பதிவிட்ட ஊா்க்காவல் படை வீரா்

பெண் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை

திருமயம் அருகே இளைஞா் கொலை

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


