சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

சீவலப்பேரி தொழிலாளி மரணத்தில் மா்மம்: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

News image

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட சேகரின் உறவினா்கள்.

Updated On :2 மே 2026, 7:26 pm

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தது குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி அவருடைய உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகேயுள்ள காட்டாம்புளி பகுதியைச் சோ்ந்தவா் சேகா் (47), தொழிலாளி. இவரது மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து அவா் தனது தாய் பாப்பா மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த வாரம் காட்டாம்புளி பகுதியில் மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் சேகா் இறந்து கிடந்தாராம். தகவலறிந்த சீவலப்பேரி போலீஸாா், அவரின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், சேகரின் உறவினா்கள், அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், போலீஸாா் முறையாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.