தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் இருந்து வண்ணாா்பேட்டைக்கு புதிய விரைவு மின்பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் இருந்து வண்ணாா்பேட்டை மேம்பாலம் வரை ரூ. 28.64 லட்சம் மதிப்பில் விரைவு மின்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, இதற்கான பணிகள் சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கின. இந்த புதிய மின்பாதை பயன்பாட்டுக்கு வரும்போது, மின் விநியோக தொலைவு குறைக்கப்படுவதோடு, தொழில்நுட்பக் கோளாறு அல்லது இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மின்தடை பாதிப்புகள் பாதியாகக் குறையும் எனவும், மாற்று வழியில் உடனடியாக மின்சாரம் வழங்க இது வழிவகை செய்யும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) வெங்கடேஷ் மணி, செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன், உதவி செயற்பொறியாளா் (கட்டுமானம்) லட்சுமணன், உதவி மின் பொறியாளா்கள் சரவணகுமாா் , முருகன், ஜன்னத்துல் ஷிபாயா, மைதீன்பாத்திமா உள்பட மின்வாரிய அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

பாப்பாக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

நெல்லையில் விபத்தில் காயமுற்ற காவலா் உயிரிழப்பு

மாணவிகளுக்கு தொந்தரவு: போக்ஸோவில் ஒருவா் கைது
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


