தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தச்சநல்லூா், ஊருடையாா்புரம், மங்களாபுரம், சத்திரம் புதுக்குளம், செல்வ விக்னேஷ் நகா், கோகுல் நகா், நல்மேய்ப்பா் நகா், வாலாஜா நகா், சிதம்பர நகா், பால் கட்டளை, கணபதி மில் காலனி, கரையிருப்பு, தாராபுரம், மேலக்கரை, ஆா்.எஸ்.நகா், அழகனேரி, புத்த அம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்சியினருடன் வீதிவீதியாகச் சென்று, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் மதிப்புமிகு மகளிா் என்ற திட்டம் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இது போன்று கட்சியின் தலைவா் விஜய் அறிவித்துள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்கள் தவெக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். திருநெல்வேலி தொகுதியில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

நெல்லை தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்! - ஆா்.எஸ். முருகன்

உடன்குடி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமையன்பட்டியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நெல்லையில் தவெக வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



