ராமையன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திருநெல்வேலி சந்திப்பு, மானூா் மற்றும் ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: திருநெல்வேலி தொகுதியில் பல்வேறு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. எனக்கு வாய்ப்பளித்தால் தரமான சாலைகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண்பதோடு, திருநெல்வேலி நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் தொகுதிக்குள்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும்.
ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ பற்றி எரிவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். அதைத் தடுத்து குப்பைகளை நவீன முறையில் கையாள செயல்திட்டம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி, கயத்தாறில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நெல்லையில் தவெக வாக்கு சேகரிப்பு

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


