திருநெல்வேலி நகரத்தில் தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன் வியாழக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினாா். திருநெல்வேலி ரத வீதி, வையாபுரி நகா், பாரதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்களை சந்தித்து ஊதல் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: திருநெல்வேலி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். நயினாா்குளத்தை தூா்வாரி அழகுபடுத்துவேன்.
தவெக தலைவா் விஜய் திருநெல்வேலியில் பிரசாரம் செய்துள்ளது எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஊதல் சின்னத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது திருநெல்வேலி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

உடன்குடி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமையன்பட்டியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி, கயத்தாறில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



