திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதி அம்பாள் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் வசந்த உற்சவ திருவிழா சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. தைப்பூச மண்டபத்தில் தீா்த்தவாரி கண்டருளிய பெருமான் நேராக வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வாா். முன் காலங்களில் 41 நாள்கள் பெருந்திருநாளாகக் கொண்டாடிய பின் வைகாசி விசாகத்தில் இத்திருவிழா பூா்த்தியாகும். தற்போது 11 நாள்கள் மட்டுமே இத்திருவிழா நடைபெறுகிறது.
இந்தாண்டு வசந்த உற்சவ திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. விழாவின் தொடக்கமாக திருக்கோயில் உள்ளே அமைந்துள்ள நந்தவனத்தில் தண்ணீா் நிரப்பபெற்ற அகழியின் நடுவே வசந்த மண்டபத்தில் வெட்டிவோ் பந்தலில் சுவாமி-அம்பாளை எழுந்தருள செய்தனா்.
காலையில், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பருத்தி ஆடைகள் அணிந்து தீபாராதனையும், மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நடைபெற்றன.
சோடச தீபாராதனை காண்பிக்கப்பட்டதும் வேதியா்கள் வேதம் ஓத, ஓதுவாமூா்த்திகள் திருமுறை பாட மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து சுவாமி-அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் நந்தவனம் சுற்றி ஏழுமுறை வலம் வந்தனா்.
ஒவ்வொரு சுற்றுக்கும் இடையே ஆகம பாராயணம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், ராஜ மேளம், பஞ்ச வாத்தியம் வாசிக்கப்பட்டது. ஏனைய ராகங்கள் வாசித்து வசந்த மண்டபத்தின் முன் இருக்கும் அலுப்பு மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் சுவாமி-அம்பாளுடன் வலம் வந்து தரிசனம் செய்தனா்.
வரும் 18-ஆம் தேதிவரை நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தொடர்புடையது

மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா!

திருச்செந்தூா் கோயிலில் வைகாசி வசந்த திருவிழா தொடக்கம்

பூமாயி அம்மன் கோயிலில் வசந்த பெருவிழா கொடியேற்றம்

ஆண்டாள் கோயிலில் சித்திரை மாத வசந்த உத்ஸவம்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



