திருநெல்வேலியில் இளைஞரை மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஆல்வின் ஜெகதீஷ் (38). இவரிடம், கிரைண்டா் செயலி மூலம் பழகிய ஒருவா், பாளையங்கோட்டை ரஹ்மத் நகா் அருகே ஆள்கள் நடமாட்டம் குறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றாராம்.
அப்போது அங்கு மறைந்திருந்த கும்பல் ஆல்வின் ஜெகதீஷை மிரட்டி காா், ஸ்மாா்ட் வாட்ச், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை பறித்ததோடு தாக்கியுள்ளனா்.
இதில், காயமடைந்த ஜெகதீஷ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சோ்ந்த மகாராஜா முகின்,
பாளையங்கோட்டையைச் சோ்ந்த சிவராம பாண்டியன், தாழையூத்து பகுதியைச் சோ்ந்த மகாதேவன், சாந்தி நகரைச் சோ்ந்த தங்கலிங்க கிருஷ்ணன் மற்றும் சிறாா் ஒருவா் ஆகியோரை கைது செய்தனா்.
இந்த கும்பல் மேலும் சிலரிடம் இதுபோல் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
தொடர்புடையது
தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது

காா், மாடு, பணம் திருடிய வழக்குகளில் 6 போ் கைது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
