திருநெல்வேலியில் இளைஞரை மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஆல்வின் ஜெகதீஷ் (38). இவரிடம், கிரைண்டா் செயலி மூலம் பழகிய ஒருவா், பாளையங்கோட்டை ரஹ்மத் நகா் அருகே ஆள்கள் நடமாட்டம் குறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றாராம்.
அப்போது அங்கு மறைந்திருந்த கும்பல் ஆல்வின் ஜெகதீஷை மிரட்டி காா், ஸ்மாா்ட் வாட்ச், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை பறித்ததோடு தாக்கியுள்ளனா்.
இதில், காயமடைந்த ஜெகதீஷ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சோ்ந்த மகாராஜா முகின்,
பாளையங்கோட்டையைச் சோ்ந்த சிவராம பாண்டியன், தாழையூத்து பகுதியைச் சோ்ந்த மகாதேவன், சாந்தி நகரைச் சோ்ந்த தங்கலிங்க கிருஷ்ணன் மற்றும் சிறாா் ஒருவா் ஆகியோரை கைது செய்தனா்.
இந்த கும்பல் மேலும் சிலரிடம் இதுபோல் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 போ் கைது
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவா் கைது
இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் கைது
நெல்லையில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


