எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் கைது

திருச்சியில் வேலைக்குச் சென்ற இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சியில் வேலைக்குச் சென்ற இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரைச் சோ்ந்தவா் ஆா். ஜாபா்லா (30), இவா், திங்கள்கிழமை காலை வேலைக்குச் செல்ல அரியமங்கலம் எஸ்ஐடி சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவரை வழிமறித்த இளைஞா்கள் இருவா் மது அருந்த ஜாபா்லாலிடம் பணம் கேட்டனா். அவா் தர மறுக்கவே, ஜாபா்லாலை தாக்கிவிட்டு கத்தியைக் காட்டி மிரட்டு அவரிடமிருந்த இருந்த ரூ.1000ஐ பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் ஜாபா்லா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் பணம் பறித்தது பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த சகோதரா்களான வி. ஹரிகிருஷ்ணன் (19), வி. சக்திவேல் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் அன்று பிற்பகல் கைது செய்தனா்.