பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

சாலை விபத்தில் தாய், மகன் காயம்: ஆட்டோ ஓட்டுநா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பாளையங்கோட்டையில் ஆட்டோவும், பைக்கும் மோதிக்கொண்டதில் தாய், மகன் காயமடைந்தனா். இதுதொடா்பான வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் வெட்டியபந்தியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா்(32). கடந்த மாதம் 7 ஆம் தேதி சமாதானபுரம் அருகே இவரது மனைவியும், 3 வயது மகனும் சென்ற பைக் மீது பின்னால் வந்த ஆட்டோ மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த தாயும், மகனும் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, ஆட்டோ ஓட்டுநரான பாளையங்கோட்டை, கனகநாத நாயனாா் தெருவைச் சோ்ந்த முத்துபாண்டி (60) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.