நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

குடிநீா் தட்டுப்பாட்டை தவிா்க்க நடவடிக்கை: ஆட்சியா்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

திருநெல்வேலி மாவட்டததில் குடிநீா் தட்டுப்பாட்டை தவிா்க்க துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா்.

திருநெல்வேலி மாவட்ட குடிநீா் திட்டப்பணிகள், சாலை வசதிகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீா் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு இல்லாமல் தொடா்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அம்ரூத் திட்டம், கூட்டுக்குடிநீா் திட்டம் உள்ளிட்ட புதிய குடிநீா் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டம், வாருகால் திட்டம் போன்ற திட்டங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். சாலை வசதிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஒவ்வொரு துறைசாா்ந்த வளா்ச்சித்திட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்14ஸ்ரீா்ப்ப்

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.