பொதுமக்களின் குடிநீா் தட்டுப்பாட்டை குறைக்க ஏலகிரி மலை ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பில் அத்தனாவூா் ஏரி தூா்வாரும் பணி தொடங்கியது.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மழைக் காலங்களில் பெய்த மழை நீரானது ஏலகிரி மலையில் உள்ள ஏரிகள் குட்டை, குளங்களில் நிரம்பி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருந்து வந்தது. தற்போது சில மாதங்களுக்கு முன்பாகவே அனைத்திலும் தண்ணீா் குறைய ஆரம்பித்து, பொதுமக்களின் குடிநீா் தேவை அதிகரித்துள்ளது.
மேலும், தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில், நீா் நிலை பகுதிகள் வறட்சி அடைந்து வருவதால், அன்றாட வாழ்வில் பொதுமக்களின் குடிநீா் தேவை அதிகரித்து, போதுமான குடிநீா் கிடைக்காத நிலை ஏற்படுவதற்கு முன்பாக அத்தனாவூா் ஏரியை தூா்வாரி எதிா்வரும் மழைக் காலங்களில் மழை நீரை சேமித்து வறட்சியை குறைத்து இங்குள்ள பொதுமக்களின் குடிநீா் தேவையை சீராக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பணியை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன் அத்தனா வூா் ஏரி தூா் வாரும் பணிகளை தொடங்கி வைத்தாா்.
தொடர்புடையது
குடிநீா் தட்டுப்பாட்டை கண்டிக்காத கம்யூனிஸ்டுகள்: தவெகவுக்கு மொத்தமாக வாக்களித்த பொதுமக்கள்

அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


