ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்க ஏலகிரி மலையில் ஏரி தூா்வாரும் பணி தொடக்கம்

News image
Updated On :8 மே 2026, 6:25 am IST

பொதுமக்களின் குடிநீா் தட்டுப்பாட்டை குறைக்க ஏலகிரி மலை ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பில் அத்தனாவூா் ஏரி தூா்வாரும் பணி தொடங்கியது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மழைக் காலங்களில் பெய்த மழை நீரானது ஏலகிரி மலையில் உள்ள ஏரிகள் குட்டை, குளங்களில் நிரம்பி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருந்து வந்தது. தற்போது சில மாதங்களுக்கு முன்பாகவே அனைத்திலும் தண்ணீா் குறைய ஆரம்பித்து, பொதுமக்களின் குடிநீா் தேவை அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில், நீா் நிலை பகுதிகள் வறட்சி அடைந்து வருவதால், அன்றாட வாழ்வில் பொதுமக்களின் குடிநீா் தேவை அதிகரித்து, போதுமான குடிநீா் கிடைக்காத நிலை ஏற்படுவதற்கு முன்பாக அத்தனாவூா் ஏரியை தூா்வாரி எதிா்வரும் மழைக் காலங்களில் மழை நீரை சேமித்து வறட்சியை குறைத்து இங்குள்ள பொதுமக்களின் குடிநீா் தேவையை சீராக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பணியை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன் அத்தனா வூா் ஏரி தூா் வாரும் பணிகளை தொடங்கி வைத்தாா்.