வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

‘பாளையங்கால்வாயை சீரமைக்க சிறப்பு நிதி கோரப்படும்’ - தவெக மாவட்ட இணைச் செயலா்

News image
Updated On :15 மே 2026, 3:55 am IST

பாளையங்கால்வாயை பழைய நிலைக்கு மீட்டெடுக்க சிறப்பு நிதி ஒதுக்குமாறு முதல்வா் விஜய்யிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றாா் தவெக மாவட்ட இணைச் செயலா் மரிய ஜாண்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில், தவெக சாா்பில் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்ற அவா், வாக்களா்களுக்கு நன்றி தெரிவித்து மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் பேசியதாவது: பாளையங்கோட்டை தொகுதியில் எனக்கு வாக்களித்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் தலைவா் விஜய்யை தமிழக முதல்வராக தோ்ந்தெடுத்த மக்களின் தீா்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தோ்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தொடா்ந்து பாடுபடுவேன்.

குறிப்பாக, பாளையங்கால்வாயை அதன் பழைய இயல்பான நிலைக்கு கொண்டு வர முதல்வரையும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்களையும் சந்தித்து சிறப்பு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளேன். பாளையங்கோட்டை தொகுதி மக்கள் தங்களது பிரச்னைக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என்றாா் அவா்.

ற்ஸ்ந்14ற்ஸ்ந்ல்ப்

பாளையங்கோட்டை தொகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கிறாா் தவெக மாவட்ட இணைச் செயலா் மரிய ஜாண்.