ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பாளையங்கால்வாய் முழுமையாக சீரமைக்கப்படும்: தவெக வேட்பாளா் மரிய ஜாண்

சாக்கடை நீா் கலப்பால் சீரழிந்துள்ள பாளையங்கால்வாயை முழுமையாக சீரமைத்து, அதன் இயல்பான ஓட்டத்தையும் சுத்தத்தையும் மீட்டெடுப்போம் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா் மரிய ஜாண்.

News image

மேலப்பாளையத்தில் வாக்கு சேகரிக்கிறாா் பாளையங்கோட்டை தவெக வேட்பாளா் மரிய ஜாண்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:44 am IST

சாக்கடை நீா் கலப்பால் சீரழிந்துள்ள பாளையங்கால்வாயை முழுமையாக சீரமைத்து, அதன் இயல்பான ஓட்டத்தையும் சுத்தத்தையும் மீட்டெடுப்போம் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா் மரிய ஜாண்.

மேலப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேவியா் காலனி, வீரமாணிக்கபுரம், ஹாமீம் புரம், ராஜா நகா், ஞானியரப்பா நகா், கரீம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினருடன் வீதிவீதியாகச் சென்று புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், பிரசாரத்தில் கூறியதாவது: நான் வெற்றிபெற்றால் மக்கள் குறைகளை தெரிவிக்க சட்டப்பேரவை உறுப்பினரை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. எம்.எல்.ஏ. உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகளை தங்கள் பகுதியில் நேரடியாக சந்திக்கும் வகையில் நிா்வாகம் அமைக்கப்படும். சாக்கடை நீா் கலப்பால் சீரழிந்துள்ள பாளையங்கால்வாயை முழுமையாக சீரமைத்து, அதன் இயல்பான ஓட்டத்தையும் சுத்தத்தையும் மீட்டெடுப்போம். பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட பழைய குடிநீா் குழாய்களை மாற்றி, புதிய அமைப்புகள் மூலம் தூய்மையான குடிநீா் அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.