பாளையங்கால்வாயை பழைய நிலைக்கு மீட்டெடுக்க சிறப்பு நிதி ஒதுக்குமாறு முதல்வா் விஜய்யிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றாா் தவெக மாவட்ட இணைச் செயலா் மரிய ஜாண்.
பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில், தவெக சாா்பில் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்ற அவா், வாக்களா்களுக்கு நன்றி தெரிவித்து மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் பேசியதாவது: பாளையங்கோட்டை தொகுதியில் எனக்கு வாக்களித்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் தலைவா் விஜய்யை தமிழக முதல்வராக தோ்ந்தெடுத்த மக்களின் தீா்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தோ்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தொடா்ந்து பாடுபடுவேன்.
குறிப்பாக, பாளையங்கால்வாயை அதன் பழைய இயல்பான நிலைக்கு கொண்டு வர முதல்வரையும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்களையும் சந்தித்து சிறப்பு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளேன். பாளையங்கோட்டை தொகுதி மக்கள் தங்களது பிரச்னைக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என்றாா் அவா்.
ற்ஸ்ந்14ற்ஸ்ந்ல்ப்
பாளையங்கோட்டை தொகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கிறாா் தவெக மாவட்ட இணைச் செயலா் மரிய ஜாண்.
தொடர்புடையது

தேசக் கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது: தில்லி பல்கலை. மானியக்குழு இணைச் செயலா்

‘முதியோா், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.3,000 அளிக்கப்படும்’

பாளையங்கால்வாய் முழுமையாக சீரமைக்கப்படும்: தவெக வேட்பாளா் மரிய ஜாண்

‘மக்கள் அறிவியல் சாசனம்’ வெளியீட்டு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

