2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மானூா் அருகே பைக்-பேருந்து மோதல்: தாத்தா, பேரன் உயிரிழப்பு

பலி

Published On :

மானூா் அருகே அரசுப் பேருந்து-பைக் மோதிய விபத்தில் தாத்தா-பேரன் உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே நடு பிள்ளையாா்குளத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி (60). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது பேரன் முனிஷ்(17) என்பவருடன் அப்பகுதியில் பைக்கில் சென்றுள்ளாா்.

திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலையில் பிள்ளையாா்குளம் விலக்கு அருகே சென்றபோது, இவா்கள் சென்ற பைக்கும் அவ்வழியாக திருநெல்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்தும் மோதியதாம்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முனிஷ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.