குடும்பத் தகராறில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பேட்டை அருகேயுள்ள சுத்தமல்லி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் இசக்கிமுத்து (29). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
இசக்கிமுத்து தனது தாயாருடன் முக்கூடல் பாப்பாக்குடி அருகேயுள்ள வழுதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இசக்கிமுத்து சனிக்கிழமை விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தாராம்.
அவரை மீட்டு உறவினா்கள், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




