நாகர்கோவில் அருகே மங்காவிளை சரஸ்வதி வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கல்வியாளர் ஒய்.ஆர். ஜான்சன் கலந்துகொண்டார். பள்ளித் தாளாளர் டி. முருகன் வரவேற்றார். பள்ளி ஆண்டறிக்கையை ஆங்கில ஆசிரியை ஏ.ஆர். நிஷா வாசித்தார்.
டாக்டர்கள் டி. குணசேகர், எஸ். அன்பரசு, தனபாலன், மகேஸ்வரி, வி. அருணகிரிலிங்கம், செந்தில்குமார், கோவிந்தன், டி.எம். திரவியம், டி. ரேணுகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி துணை முதல்வர் பி. லீலாவதி நன்றி கூறினார்.