அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி 5-ம் ஆண்டு விழா

கன்னியாகுமரியை அடுத்த எ.வி.கே. நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியின் 5-ம் ஆண்டு விழா செவ்வாய் (மார்ச் 19) நடைபெறுகிறது.

கன்னியாகுமரியை அடுத்த எ.வி.கே. நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியின் 5-ம் ஆண்டு விழா செவ்வாய் (மார்ச் 19) நடைபெறுகிறது.

 விழாவுக்கு கல்லூரி தலைவர் டி.பீட்டர் ஜேசுதாஸ் தலைமை வகிக்கிறார். பாத்திமா ராஜதுரை குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். கல்லூரி தாளாளர் டி.மரியவிக்டர் வரவேற்கிறார். சென்னை சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், சென்னை சாரதா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் எஸ்.ராஜதுரை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.லீனஸ் ஜேசு மார்ட்டின் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர். கல்லூரி முதல்வர் ஜே.டி.டார்வின் ஆண்டறிக்கை வாசிக்கிறார். விழாவையொட்டி கல்லூரி மாணவர், மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்லூரி துணை முதல்வர் டி.வளன் அரசு நன்றி கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com