அரசு ரப்பர் கழகம் காளிகேசம் பிரிவில் ரப்பர் பால் சேகரிப்பு மையத்தை சீரமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அரசு ரப்பர் கழகம், மணலோடை கோட்டத்தில் காளிகேசம் பகுதியில் ஒரு பால் சேகரிப்பு மையம் உள்ளது. காளிகேசம் பிரிவில் ரப்பர் மரங்களிலிருந்து பால் வடிப்பு செய்து வரும் தொழிலாளர்கள் இந்த மையத்தில் வந்து பாலை எடை போட்டு ரப்பர் கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த மையத்தின் மேற்கூரை பெயர்ந்து கிடப்பதால், இங்கு வைக்கப்பட்டுள்ள எடை கருவிகள் மழையில் சேதமடைந்து வருகின்றன. மேலும், ரப்பர் பால் கொண்டு வரும் தொழிலாளர்களும், ஊழியர்களும் மழையில் நனைந்தவாறு நிற்க வேண்டியுள்ளது. எனவே இந்த மையத்தை சீரமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலை: ஜி.கே.வாசன்
ஆட்டோ கட்டணத்தை உயா்த்த தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வா் விஜய் அறிவிப்பு





