பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்திற்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்திற்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்துகொள்கிறார்கள். எனவே, கல்குளம் மற்றும் விளவங்கோடு வட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.