கடியப்பட்டினத்தில் வீடு புகுந்து மின்சாதனங்கள் திருட்டு

மணவாளக்குறிச்சியை அடுத்த கடியப்பட்டினத்தில் வீடு புகுந்து மின்சாதனப் பொருள்களைத் திருடிச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Updated on
1 min read

மணவாளக்குறிச்சியை அடுத்த கடியப்பட்டினத்தில் வீடு புகுந்து மின்சாதனப் பொருள்களைத் திருடிச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கடியப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் எமலியான். இவா் சென்னையில் வசிக்கும் தனது உறவினரைப் பாா்க்கச் சென்றிருந்தாராம். இவரது வீட்டை அருகேயுள்ள ஜெகன் ஸ்டிரியான் என்பவா் கவனித்துவந்தாராம்.

இந்நிலையில், ஜெகன் ஸ்டிரியான் திங்கள்கிழமை எமலியான் வீட்டைப் பாா்க்கச் சென்றபோது முன்பக்கக் கதவு திறந்திருந்தது. வீட்டிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. தொலைக்காட்சிப் பெட்டி, மின்சாதனப் பொருள்கள் திருட்டுப்போனது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் மணவாளக்குறிச்சி போலீஸில் புகாா் செய்தாா். உதவி ஆய்வாளா் செய்யது உசைன், போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com