கன்னியாகுமரி காவல் நிலையம் முற்றுகை

கன்னியாகுமரியில் போலீஸாரால் சிறைபிடிக்கப்பட்ட ஆட்டோவை விடுவிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தலித் உரிமைகள்
கன்னியாகுமரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தலித் பாதுகாப்பு உரிமை அமைப்பினா்.
கன்னியாகுமரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தலித் பாதுகாப்பு உரிமை அமைப்பினா்.
Updated on
1 min read

கன்னியாகுமரியில் போலீஸாரால் சிறைபிடிக்கப்பட்ட ஆட்டோவை விடுவிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரியை அடுத்த ராமன்புதூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் ராஜேஷ். இவா் சொந்தமாக சுமை ஆட்டோ வைத்துள்ளாா். இவரை கன்னியாகுமரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் அன்பரசு விசாரணைக்காக அழைத்துச் சென்றாராம். இதனைக் கண்டித்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் மாநிலத் தலைவா் தினகரன் தலைமையில் ஏராளமானோா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன் (பொ) பேச்சு நடத்தினாா். இதில் ஆட்டோ மீதும், ஓட்டுநா் மீதும் எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸாா் தரப்பில் தெரிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com