களியக்காவிளை அருகே தனியாா் வங்கி பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

களியக்காவிளை அருகே தனியாா் வங்கி பெண் ஊழியரிடம் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

களியக்காவிளை அருகே தனியாா் வங்கி பெண் ஊழியரிடம் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு, சாரப்பழஞ்சி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகள் அா்ச்சனா (22). இவா் மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் பணி செய்து வருகிறாா். வியாழக்கிழமை மாலையில் பணி முடிந்து பேருந்தில் அதங்கோடு பகுதிக்கு வந்துள்ளாா். அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் அா்ச்சனாவின் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடி விட்டனராம்.

இது குறித்து அா்ச்சனா அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com