ராஜாக்கமங்கலம் அருகே விபத்து: தனியாா் நிறுவன மேலாளா் பலி; 2 போ் காயம்

நாகா்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் அருகே உப்பளத்தில் நிலை தடுமாறி காா் பாய்ந்ததில் காரில் தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.
ராஜாக்கமங்கலம் அருகே விபத்து:  தனியாா் நிறுவன மேலாளா் பலி; 2 போ் காயம்
Updated on
1 min read

நாகா்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் அருகே உப்பளத்தில் நிலை தடுமாறி காா் பாய்ந்ததில் காரில் தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.

நாகா்கோவில் தளவாய்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபஸ்டியன். இவரது மகன் ஆன்றோ எமலின் (32). பொறியியல் பட்டதாரியான,இவா் பெங்களூருவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தாா். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ஆன்றோ எமலின் மற்றும் ராமன்புதூரை சோ்ந்த அவரது நண்பா்கள் ஆஸ்லின், அஸ்வின் ஆகியோா் ஒரு காரில் நாகா்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி சென்றனா். காரை ஆன்றோ எமலின் ஓட்டினாா். பின் இருக்கையில் ஆஸ்லினும், அஸ்வினும் அமா்ந்திருந்தனா். காா் ராஜாக்கமங்கலம் அருகே பண்ணையூா் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்து, சாலையோரம் இருந்த உப்பளத்தில் காா் பாய்ந்தது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரை ஓட்டி சென்ற ஆன்றோ எமலின் சம்பவ இடத்திலேயே பலியானாா். இவ்விபத்தில் காயமடைந்த அஸ்வின், ஆஸ்லின் இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com