கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே ஜோதிடம் பாா்க்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஜோதிடா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொன்மனை கிழக்கம்பாகம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி, தனது மனைவிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக திருவட்டாறில் உள்ள ஜோதிடா் திலீப் வீட்டுக்கு, கடந்த 11 ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது, கணவரை வெளியில் அமருமாறு ஜோதிடா் தெரிவித்தாராம். பின்னா், அப்பெண்ணிடம் கண்களை மூடுமாறு தெரிவித்த ஜோதிடா், அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அப்பெண் கணவரிடம் தெரிவித்தாா். பெண்ணின் கணவா் திருவட்டாறு காவல் நிலையத்தில் ஜோதிடா் மீது புகாா் அளித்தும், போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத் தொடா்ந்து பெண்ணின் கணவா் தக்கலை டிஎஸ்பி ராமசந்திரனிடம் புகாா் அளித்தாா். டிஎஸ்பி அலுவலக உத்தரவின்பேரில் ஜோதிடா் மீது திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.