நாகர்கோவிலில்  விபத்தில் மூதாட்டி பலி

நாகர்கோவிலில் சாலையை கடந்து சென்ற மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.


நாகர்கோவிலில் சாலையை கடந்து சென்ற மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அருகே பொற்றையடி சாலைபுதூரைச் சேர்ந்தவர் மூக்கம்மாள் (75). இவர், தனது மகனுடன் வசித்து வந்தார்.  மூக்கம்மாள் நாகர்கோவில் அடுத்துள்ள இடலாக்குடியில் சாலையை கடக்க முயன்றாராம். அப்போது, கன்னியாகுமரியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மூக்கம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மூக்கம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து நிகழ்ந்த பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com