பளுகல் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பளுகல் அருகேயுள்ள மத்தம்பாலை குழிவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சகாய் (39). கட்டடத் தொழிலாளி. மது அருந்தும் பழக்கமுள்ள சகாய், அடிக்கடி போதையில் மனைவி, குழந்தைகளிடம் தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மனைவி, குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். புகாரின்பேரில், பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.