விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற மின் நிலைய ஊழியர் சாவு

பேச்சிப்பாறை அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற மின் நிலைய ஊழியர் வியாழக்கிழமை இறந்தார்.
Updated on
1 min read

பேச்சிப்பாறை அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற மின் நிலைய ஊழியர் வியாழக்கிழமை இறந்தார்.
பேச்சிப்பாறை அருகேயுள்ள காக்கச்சல் பகுதியைச்  சேர்ந்தவர் லட்சுமணன் (67). இவர் கோதையாறு மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், அண்மையில் காக்கச்சல் பகுதியில் பைக்கில் சென்றபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தாராம்.  இதையடுத்து நாகர்கோவில் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் வியாழக்கிழமை இறந்தார். பேச்சிப்பாறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com