ஈத்தாமொழி அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
By DIN | Published On : 19th May 2019 04:28 AM | Last Updated : 19th May 2019 04:28 AM | அ+அ அ- |

ஈத்தாமொழி அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம், ஈத்தாமொழி அருகேயுள்ள புத்தன்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலிங்கம் மனைவி காசிதங்கம் (60). வெள்ளிக்கிழமை இரவு இவர் தனது வீட்டின் பின்புறத்துக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் காசிதங்கம் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம்.
இது குறித்த புகாரின்பேரில், ஈத்தாமொழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.