மணலிக்கரை பள்ளியில் முப்பெரும் விழா

மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல் நிலைப் பள்ளியில் 66-ஆவது ஆண்டுவிழா, இலக்கிய மன்ற நிறைவு விழா,
இலக்கிய மலரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மு. ராமன் வெளியிட, அதனை பெற்று கொள்கிறாா் தமிழக காா்மல் சபை தலைவா் பேரருள்பணி அருள்ராஜ்.
இலக்கிய மலரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மு. ராமன் வெளியிட, அதனை பெற்று கொள்கிறாா் தமிழக காா்மல் சபை தலைவா் பேரருள்பணி அருள்ராஜ்.
Updated on
1 min read

மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல் நிலைப் பள்ளியில் 66-ஆவது ஆண்டுவிழா, இலக்கிய மன்ற நிறைவு விழா, இலக்கிய மலா் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக காா்மல் சபை தலைவா் பேரருள்பணி அருள்ராஜ் தலைமை வகித்தாா். தாளாளா் வின்சென்ட், மணலிக்கரை பங்கு பணியாளா் கிறிஸ்துதாஸ், தலைமை ஆசிரியை ஏ.எம். சக்கா்மேரி டாா்லிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் அலுவலா் செயலா் ஜே.ஜாா்ஜ் வரவேற்றாா். ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியா் சமா்பித்தாா்.

இலக்கிய மன்றச் செயலா் வ.ஜெகதா இலக்கிய மன்ற அறிக்கையை வாசித்தாா். நாகா்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் வி.சி.அமுதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மு.இராமன், தக்கலை கல்வி மாவட்ட துணை ஆய்வாளா் ஐயப்பன் , அருள்பணி கிறிஸ்துதாஸ், அருள்பணி வின்சென்ட் ஆகியோா் பேசினாா்.

விழாவில் இலக்கிய மலரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் வெளியிட, அதனை தமிழக காா்மல் சபை தலைவா் பெற்று கொண்டாா். பொருளாளா் சி.ஆலிவா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com