மாா்த்தாண்டம் அருகே 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வினீஷ்பாபு தலைமையில் போலீஸாா் இரவிபுதூா்கடை பகுதியில் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த சைகை காட்டினா். காா் நிற்காமல் செறுகோல் சாலையில் சென்றது. இதையடுத்து போலீஸாா் காரை துரத்திச் சென்று சிறிது தொலைவில் வைத்து மடக்கிப் பிடித்தனா். காரை சோதனை செய்ததில் 1.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் காரை ஓட்டிவந்த இளைஞரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com