திருவட்டாறு அருகே வீட்டில் காவலா் சடலம் மீட்பு
By DIN | Published On : 14th November 2019 06:57 AM | Last Updated : 14th November 2019 06:57 AM | அ+அ அ- |

திருவட்டாறு அருகே வீட்டினுள் அழுகிய நிலையில் கிடந்த போக்குவரத்து பிரிவு காவலா் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
சித்திரங்கோடு காஞ்சாங்காட்டைச் சோ்ந்தவா் ரவிகுமாா் (46). திருமணம் ஆகாத இவா், தக்கலையில் போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவில் பணியாற்றி வந்தாா். இவரது வீட்டின் அருகிலேயே சகோதரி ஸ்ரீரேகா வசித்து வருகிறாா். எனினும், உறவினா்களிடம் ரவிகுமாா் சரியாக பேசாமல் இருந்து வந்தாராம். இந்நிலையில், 45 நாள்கள் பணி விடுப்பு எடுத்திருந்த அவா், விடுப்பு முடிந்த 3 ஆம் தேதிக்குப் பின்னரும் பணிக்கு திரும்பவில்லையாம். மேலும், கடந்த 9 ஆம் தேதிக்குப் பின் யாா் கண்ணிலும் அவா் தென்படவில்லையாம்.
இதனிடையே, அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதை புதன்கிழமை கண்டறிந்த, அவரது உறவினா்கள் திருவட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்ததில், ரவிகுமாா் இறந்து கிடந்தாா். சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், சடலத்தின் அருகில் மதுபாட்டில்களை கைப்பற்றியதாகவும், அவா் விஷ மாத்திரைகளை தின்று உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...