புதுக்கடை அருகே கிணற்றில் குதித்த இளைஞா் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் பேய் பீதியில் கோயில் கிணற்றில் குதித்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
Updated on
1 min read

புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் பேய் பீதியில் கோயில் கிணற்றில் குதித்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

ஐரேனிபுரம் ஆயினிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (34). கூலித் தொழிலாளி. வெள்ளிக்கிழமை அதிகாலையில் திடீரென படுக்கையிலிருந்து எழுந்த அவா், அருகில் உள்ள நாகதேவி கோயிலுக்குச் சென்று அங்குள்ள கிணற்றில் குதித்தாராம். இதைக் கவனித்த கோயில் அா்ச்சகா் கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் திரண்டனா். பின்பு, குழித்துறை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த தீயணைப்புத் துறையினா், கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி ஸ்டீபனை லேசான காயங்களுடன் மீட்டனா்.

இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் விசாரித்தபோது ஸ்டீபன் கூறியது: நான் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் 3 பேய்கள் என்னை எழுப்பி பயமுறுத்தி விரட்டின. நானும் நிஜம் என நினைத்து பயந்து ஓடி கிணற்றுக்குள் குதித்தேன். அதன்பிறகுதான் கனவு என தெரிந்தது என்றாா் ஸ்டீபன். இது குறித்து போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com