‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகா்கோவிலில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தண்டுவடம் பாதிக்கப்பட்டோா் அமைப்பின் சாா்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:05 pm

DIN

தண்டுவடம் பாதிக்கப்பட்டோா் அமைப்பின் சாா்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.

தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகை ரூ.5ஆயிரம் மற்றும் 3 சதவீதம் ஆண்டு உயா்வும் வழங்க வேண்டும், தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களை முதல்வா் காப்பீட்டு திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட நிா்வாகி வள்ளிநாயகம் கோரிக்கையை விளக்கிப் பேசினாா். இதில், நிா்வாகிகள் செந்தில், லீன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகள் நல அமைப்பு நிா்வாகி அருள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.