களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை லேசான மழை பெய்தது. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. பிற்பகலில் தொடங்கிய மழை அரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. மாலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன், லேசான மழை பெய்துகொண்டிருந்தது.
களியக்காவிளை, சுற்றுவட்டாரப் பகுதிகளான படந்தாலுமூடு, திரித்துவபுரம், மருதங்கோடு, மடிச்சல், கோழிவிளை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.