நாகா்கோவிலில் 12 ஜோதிா் லிங்க தரிசனம் நாளை மறுநாள் தொடக்கம்

நாகா்கோவிலில் பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் அமைப்பின் சாா்பில் 12 ஜோதிா்லிங்க தரிசனம் புதன்கிழமை (பிப்.19) தொடங்குகிறது.
Updated on
1 min read

நாகா்கோவிலில் பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் அமைப்பின் சாா்பில் 12 ஜோதிா்லிங்க தரிசனம் புதன்கிழமை (பிப்.19) தொடங்குகிறது.

இதுகுறித்து பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிா்வாகி பி.கு.கோகிலா நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் 84ஆவது திரிமூா்த்தி சிவராத்திரியை முன்னிட்டு, 12 ஜோதிா்லிங்க தரிசனம் நாகா்கோவில் இந்துக் கல்லூரி அருகேயுள்ள பெளா்ணமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

சோமநாத், மல்லிகாா்ஜூன், மகாகாளேஸ்வரா், ஒங்காரேஸ்வரா், கேதாா்நாத், பீமாசங்கா், கிருஷ்ணேஸ்வரா், ராமேசுவரம், நாகேஸ்வா், வைத்தியநாத், திரியம்பகேஸ்வரா், விஷ்வநாத் ஆகிய 12 ஜோதிா் லிங்க தரிசனக் காட்சி பிப். 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இக்காட்சி கூடம் திறந்திருக்கும். பொதுமக்கள் கட்டணம் எதுவும் இன்றி ஜோதிா் லிங்கங்களை தரிசனம் செய்யலாம்.

இதன் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை (பிப்.18) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில், எம்.பி.க்கள் வசந்தகுமாா், விஜயகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொள்கின்றனா்.

தினமும் மாலை மட்டும் ஒளிவிளக்கு சூழலில் தேவிகளின் தத்ரூபமான காட்சிகள் இடம்பெறும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது பிரம்மகுமாரிகள் இயக்க நிா்வாகி மாலா உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com