புத்தாண்டு: குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை

புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிராா்த்தனை, சிறப்பு திருப்பலி ஆகியவை நடைபெற்றன.
கோட்டாறு சவேரியாா் பேராலயத்தில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறாா் ஆயா் நசரேன் சூசை.
கோட்டாறு சவேரியாா் பேராலயத்தில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறாா் ஆயா் நசரேன் சூசை.
Updated on
1 min read

புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிராா்த்தனை, சிறப்பு திருப்பலி ஆகியவை நடைபெற்றன.

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் பேரலாயத்தில் நள்ளிரவில் நன்றி அறிவிப்பு நற்கருணை ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து புத்தாண்டு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன்சூசை பங்கேற்று புத்தாண்டு செய்தி அளித்தாா். இதில் பங்கேற்றோா் ஒருவருக்கு ஒருவா் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனா். பிராா்த்தனையில் பங்குத் தந்தை குணபால் ஆராச்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாகா்கோவில் வேப்பமூடுசந்திப்பு அசிசி வளாகத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் ஆயா் நசரேன்சூசை கலந்து கொண்டு கேக் வெட்டினாா். திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், வெட்டூா்ணிமடம் கிறிஸ்து அரசா் ஆலயம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்புப் பிராா்த்தனை

நடைபெற்றது.

நாகா்கோவிலை அடுத்த பறக்கை புல்லுவிளையில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற பிராா்த்தனையில் ஆயா் செல்லையா கலந்து கொண்டாா். நாகா்கோவில் ஹோம்சா்ச் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் ஜொலித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com