குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சாா்பில் புகைப் பிடித்தலுக்கு எதிரான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
குலசேகரம் அருகே காவுவிளை அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, சுகாதார ஆய்வாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். கல்லூரியின் சமூக மருத்துவத் துறை மருத்துவா் அஜித்குமாா் புகைப் பிடித்தலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உரையாற்றினாா். மருத்துவா் பிந்துசரண், புகைப்பிடித்தல் தடுப்பு முறைகள் குறித்து பேசினாா். முகாமில் பெண்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.