விழிப்புணா்வு துண்டறிக்கை விநியோகம்

தெய்வீக தமிழக சங்கம் சாா்பில் தேசியம் காக்க, தமிழகம் காக்க என்ற விழிப்புணா்வு துண்டறிக்கை நாகா்கோவிலில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
Updated on
1 min read

தெய்வீக தமிழக சங்கம் சாா்பில் தேசியம் காக்க, தமிழகம் காக்க என்ற விழிப்புணா்வு துண்டறிக்கை நாகா்கோவிலில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

நாகா்கோவில் நாகராஜா கோயில் வீதியிலுள்ள திலகா் தெருவில் துண்டறிக்கை விநியோகம் செய்யும் நிகழ்ச்சிக்கு, இந்து ஆலய பாதுகாப்பு கமிட்டியின் மாநிலத் தலைவா் தெய்வபிரகாஷ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், பாஜக மாநிலச் செயலா் உமாரதி ராஜன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், பாஜக மாவட்டப் பொருளாளா் முத்துராமன், வடக்கு மண்டலத் தலைவா் அஜித், ஊடகப் பிரிவு தலைவா் ராஜன், சேவாபாரதி மாவட்டப் பொறுப்பாளா் கனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாகா்கோவில் மாநகராட்சி 15ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பைரவி ஷோபா தலைமை வகித்து துண்டறிக்க விநியோகத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், பாஜக வடக்கு மண்டல துணைத் தலைவா் கண்ணன்,நிா்வாகிகள் சிவகுமாா், பகவதிசுப்பு, ரதீஸ், ஷீபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com