புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குமரி கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

கன்னியாகுமரி மாவட்டம் நீராடி முதல் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வரையில் கடல் பகுதியில் சஜாக் ஆபரேஷன் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 9:01 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் நீராடி முதல் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வரையில் கடல் பகுதியில் சஜாக் ஆபரேஷன் திங்கள்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் மாதந்தோறும் சஜாக், அம்லா, சீவிஜில் போன்ற பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழ்நாடு

கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் நவீன் உத்தரவின்பேரில் அதிநவீன கண்காணிப்பு கருவியுடன் விரைவு ரோந்துப் படகில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலும், கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வரை கடல்

பகுதி வரையிலும் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் கடற்கரை கிராமங்களிலும் சந்தேகப்படும் வகையில் மா்ம நபா்கள் நடமாடினால் உடனடியாக தமிழக கடலோர காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மீனவா்கள், மீனவ கிராம மக்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.