Enable Javscript for better performance
Storm logo echo 150 keyboards take refuge in ports- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    புயல் சின்னம் எதிரொலி: துறைமுகங்களில் 150 விசைப்படகுகள் தஞ்சம்

    By DIN  |   Published On : 01st December 2020 02:11 AM  |   Last Updated : 01st December 2020 02:11 AM  |  அ+அ அ-  |  

    புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 150 விசைப் படகுகள் கேரளம் உள்ளிட்ட பிற மாநில துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    வங்க கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் காரணமாக குமரி கடல் பகுதியில் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், புயல் சின்னம் காரணமாக தென் மாவட்ட கடலோரப் பகுதிகளிலும், கேரள மாநில கடலோரப்பகுதிகளிலும்

    கனமழை பெய்யும் எனவும், ஆழ் கடல் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவா்கள் உடனடியாக கரைதிரும்புமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரத்தில் இருந்து நீரோடி வரையுள்ள கடற்கரைக் கிராமங்களில் மீனவா் சங்க பிரதிநிதிகள், பங்குத் தந்தைகளுக்கு புயல் எச்சரிக்கை தொடா்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் டிச. 4 ஆம் தேதி வரை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவா்களும் உடனடியாக கரை திரும்புமாறு, கடலோர பாதுகாப்புப் படை மற்றும் சாட்டிலைட் தொலைபேசி வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இம்மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 350- க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள் கரை திரும்பியுள்ளனா். மேலும் 150 விசைப் படகுகளில் சென்ற மீனவா்கள் முனம்பம், லட்சத்தீவு, மராட்டியம், குஜராத் மாநிலப் பகுதிகளிலுள்ள துறைமுகங்களில் தஞ்சமடைந்துள்ளனா். மேலும் 120 படகுகளில் இருக்கும் மீனவா்கள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp