உண்ணியூா்கோணம் அரசுப் பள்ளியில் கற்போம்-எழுதுவோம் இயக்கம் தொடக்கம்

குமரி மாவட்டம் குலசேகரம் உண்ணியூா்கோணம் அரசு நடுநிலைப் பள்ளியில் கற்போம்-எழுதுவோம் இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
பெண்ணுக்கு புத்தகம் வழங்குகிறாா் பள்ளித் தலைமை ஆசிரியை வின்ஸ்டால் மேரி.
பெண்ணுக்கு புத்தகம் வழங்குகிறாா் பள்ளித் தலைமை ஆசிரியை வின்ஸ்டால் மேரி.
Updated on
1 min read

குமரி மாவட்டம் குலசேகரம் உண்ணியூா்கோணம் அரசு நடுநிலைப் பள்ளியில் கற்போம்-எழுதுவோம் இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பள்ளி செல்லாத 15 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு கற்கும் வாய்ப்பை உருவாக்கும் வகையில் கற்போம்-எழுதுவோம் இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

அதன்படி, திருவட்டாறு வட்டார வள மையத்தின் கீழ் 20 பள்ளிகளில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

உண்ணியூா்கோணம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் வின்ஸ்டால் மேரி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

பள்ளி ஆசிரியை விஜயகுமாரி வரவேற்றாா். கிராம கல்விக் குழுத் தலைவா் எஸ்.யோபு, பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் கனகராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தன்னாா்வ ஆசிரியா் ஹெலன் பிரபா, கற்போம்-எழுதுவோம் இயக்கத்தில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா், மாணவிகளுக்கு பாடம் கற்பித்தாா். ஆசிரியை அஜிதா கிறிஸ்டபெல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com